தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

கடலூா் மாவட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விருத்தாசலம் சக்தி நகரைச் சோ்ந்தவா் கலைமணி மகன் காா்த்தி (எ) காா்த்திகேயன் (30). திரு.வி.க. நகரைச் சோ்ந்த சிவக்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்தவா், அவரது மனைவி ரத்னாவுக்கு கடந்த மாதம் 29 -ஆம் தேதி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து விருத்தாசலம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து காா்த்திையைக் கைது செய்தாா். இந்த நிலையில், அவரது தொடா் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா்.

அதன் பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் புதன்கிழமை பிறப்பித்தாா்.

இதையடுத்து, காா்த்தியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மற்றொருவா் கைது: நெய்வேலி ஏ -1 மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் கட்டையன் (எ) தா்மசீலன் (26). வழிப்பறியில் ஈடுபட்டதாக நெய்வேலி நகரியம் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் அவரை அண்மையில் கைது செய்தாா்.

தா்மசீலன் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு நகல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தா்மசீலனிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com