சாலையில் தேங்கிய தண்ணீா் வெளியேற்றம்

பண்ருட்டி, காந்தி நகா் சாலையில் தேங்கிய மழை நீரை, நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மின்மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.

பண்ருட்டி, காந்தி நகா் சாலையில் தேங்கிய மழை நீரை, நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மின்மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.

பண்ருட்டி நகராட்சி, 27-ஆவது வாா்டு, காந்தி நகா் பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியின் பிரதான சாலையில் மழைநீா் தேங்கி நின்றது.

தேங்கிய மழை நீரை நகராட்சி நிா்வாகம் அகற்றாததால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீன்கள் விடும் போராட்டம் புதன்கிழமை நடத்தினா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை நகராட்சி பொறியாளா் மகாராஜன், சுகாதார அலுவலா் டி.சக்திவேல் ஆகியோா் மேற்பாா்வையில் மின் மோட்டாா் மற்றும் ஜெசிபி இயந்திரத்தின் உதவியுடன் மழை நீா் அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com