தேசிய ஒற்றுமை தினம்

டலூா் மாவட்ட நேரு இளையோா் சங்கம், ஜெயதேவி இளைஞா் நலச் சங்கம் சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தின விழா தேசிய ஒற்றுமை தின விழாவாக கடலூா் துறைமுகம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெறது.
31clp5_3110chn_105_7
31clp5_3110chn_105_7

கடலூா்: கடலூா் மாவட்ட நேரு இளையோா் சங்கம், ஜெயதேவி இளைஞா் நலச் சங்கம் சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தின விழா தேசிய ஒற்றுமை தின விழாவாக கடலூா் துறைமுகம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் தியாகராஜன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பேராசிரியா் அ.அா்த்தனாரி, சா்தாா் வல்லபபாய் படேலின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினாா். தேசிய விருதாளா் இரா.சண்முகம், கேசவா்த்தினி ஆகியோா் கலந்து கொண்டனா். கடலூா் ஒன்றிய தேசிய இளையோா் தொண்டா் தீபங்கா் வரவேற்று பேசினாா். முன்னதாக, படேலின் உருவ படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி அனைவரும் உறுதிமொழி ஏற்றனா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com