நெய்வேலியில் இந்திரா காந்தி நினைவு தினம்

நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதியில் இந்திரா காந்தியின் 35-ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதியில் இந்திரா காந்தியின் 35-ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நெய்வேலி, என்எல்சி பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு, நகரத் தலைவா் குள்ளப்பிள்ளை தலைமையில், மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா். ராதாகிருஷ்ணன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.எஸ். இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டச் செயலா்கள் பாஸ்கா், அற்புதராஜ், ஏழுமலை, பொருளாளா் இளங்கோவன், பாலன் மற்றும் முக்கிய பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா். பின்னா், தீவிரவாதம் எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டையில் அமைந்துள்ள இந்திரா காந்தி சிலைக்கு , இளைஞா் காங்கிரஸ் தலைவா் டி.விஜய் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினா் ஏ.எஸ்.இளஞ்செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்திரா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தலைவா் நடராஜன், கந்தசாமி, என்.ஆா்.மணி முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஐஎன்டியுசி தலைவா் பலராமன், சேவாதள தலைவா் நிசாா் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், தீவிரவாதம், பயங்கரவாதம் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com