பண்ணுருட்டி முத்தமிழ் சங்கக் கூட்டம்

பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கச் செயலர் ரத்தின.
ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் க.கதிரவன் வரவேற்றார். நிர்வாகிகள் ஹரிஆனந்த், மு.ச.நபில்புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பெ.அய்யனார் குறள் விளக்கம் அளித்தார். சங்கத்தின் ஆட்சி மன்றத் தலைவர் ரா.சஞ்சீவிராயர், ஒருங்கிணைப்பாளர் ஆ.ராஜா, செயற்குழு உறுப்பினர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் மறைந்த நிர்வாகி சீனிவாசனின் உருவப் படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது மனைவி சரஸ்வதி, மகன் சீ.லோகநாதன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். செயற்குழு உறுப்பினர் 
ராம.ஆறுமுகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com