கடலூர் சுற்றுவட்டாரத்தில் மழை

கடலூர் மாவட்டத்தில் சில வாரங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாள்களாக பெரிய அளவில் பெய்யவில்லை. 

கடலூர் மாவட்டத்தில் சில வாரங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாள்களாக பெரிய அளவில் பெய்யவில்லை. 
இந்த நிலையில், புதன்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர்,  இரவு 9 மணியளவில் கடலூரில் தூறலுடன் பெய்த மழை பின்னர் பலத்த மழையாக  மாறியது. 
புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு: (மில்லி மீட்டரில்) 
வேப்பூர் 17, ஸ்ரீமுஷ்ணம் 14.1, பண்ருட்டி 12, வானமாதேவி 9, குப்பநத்தம் 7.6, பெலாந்துறை 6.2, குடிதாங்கி 6, கடலூர் 3.8, லக்கூர் 3.3, விருத்தாசலம் 3, குறிஞ்சிப்பாடி 1 மில்லி மீட்டர் பதிவாகியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com