கடலூர் மாவட்டத்தில் சில வாரங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாள்களாக பெரிய அளவில் பெய்யவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இரவு 9 மணியளவில் கடலூரில் தூறலுடன் பெய்த மழை பின்னர் பலத்த மழையாக மாறியது.
புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு: (மில்லி மீட்டரில்)
வேப்பூர் 17, ஸ்ரீமுஷ்ணம் 14.1, பண்ருட்டி 12, வானமாதேவி 9, குப்பநத்தம் 7.6, பெலாந்துறை 6.2, குடிதாங்கி 6, கடலூர் 3.8, லக்கூர் 3.3, விருத்தாசலம் 3, குறிஞ்சிப்பாடி 1 மில்லி மீட்டர் பதிவாகியிருந்தது.