பேருந்தில் பயணிகள் இருவரிடையே தகராறை விலக்கிவிட்ட நடத்துநர் தாக்கப்பட்டார்.
விருத்தாசலம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கலைவாணன் (29). தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை மங்கலம்பேட்டை-மாத்தூர் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார்.
அப்போது, பேருந்தில் பயணித்த மாத்தூரைச் சேர்ந்த வீராசாமி மகன் விஸ்வநாதன் (20), கலியமூர்த்தி மகன் ராஜேஷ் (29) ஆகியோர் மது போதையில் அவர்களுக்குள் சண்டையிட்டு வந்தனர். அவர்களை கலைவாணன் சமாதானப்படுத்திய நிலையில், இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கியதுடன், பேருந்தையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கலைவாணன் அளித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.