வீரட்டானேஸ்வரர் கோயிலில்  பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி, திருவதிகை பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைநடைபெற்று, நந்திதேவர் வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.  பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com