பண்ருட்டி அருகே ஆட்டோ மோதியதில் காயமடைந்த கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.
பண்ருட்டி, ரயில்வே நகர் காலனியில் வசிப்பவர் பாரதி(23). இவரது தந்தை பழனிவேல் (40) கரும்பு வெட்டும் கங்காணியாக இருந்து வந்தார். புதன்கிழமை இரவு கரும்பு வெட்டுவதற்கு ஆள்களை தயார் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் முத்துகிருஷ்ணாபுரம் புறப்பட்டார்.
திருவதிகை ரெங்நாத பெருமாள் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே பழனிவேல் உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.