தப்பியோடிய கைதி பிடிபட்டார்

கடலூரில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடிய கைதி வியாழக்கிழமை பிடிபட்டார். 

கடலூரில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடிய கைதி வியாழக்கிழமை பிடிபட்டார். 
குறிஞ்சிப்பாடி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ஜான்சன் (26). இவர் இரு சக்கர வாகனத் திருட்டு வழக்கில் கடலூர் புதுநகர் போலீஸாரால் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 
இந்த நிலையில்,   உடல்நலம் சரியில்லை எனத் தெரிவித்த ஜான்சனை மருத்துவப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சாவடி பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அவ்வழியாக வந்த ஜான்சன் போலீஸாரைக் கண்டதும் ஓடினார்.  போலீஸார் அவரை துரத்திச் சென்று பிடித்து புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com