முன்னாள் கணவர் பெயரைக் கூறிய பெண் மீது தாக்குதல்

விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடலைச் சேர்ந்தவர் இளவரசன் மகள் சித்ரா (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 

விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடலைச் சேர்ந்தவர் இளவரசன் மகள் சித்ரா (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ரஞ்சித்குமார் (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ள நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். 
இந்த நிலையில், புதன்கிழமை சித்ரா ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்றிருந்தபோது, கணவர் பெயரைக் கேட்டதற்கு விவாகரத்தான ரஞ்சித்குமார் பெயரைக் கூறினாராம்.
 இதனை அறிந்த ரஞ்சித்குமார், சித்ராவைத் திட்டி  தாக்கினாராம்.  காயமடைந்த சித்ரா அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com