ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் பாலாலயம்

பண்ருட்டி வடகைலாசம் மேலப்பாளையம் பலிஜா நாயுடு சமுகத்துக்கு உள்பட்ட பஜனைமடம் என்ற பஜனைக்

பண்ருட்டி வடகைலாசம் மேலப்பாளையம் பலிஜா நாயுடு சமுகத்துக்கு உள்பட்ட பஜனைமடம் என்ற பஜனைக் கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீ சஞ்சீவிராயர் ஸமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் பாலாலய பிரிதிஷ்டமை வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்வை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9 மணியளவில் ஸகஸ்ரநாம பாராயணம், கலச ஸ்தாபனம், திருப்பாவை சாற்றுமுறையும், மாலை 5 மணியளவில் பகவத் அனுஞ்ஞை, யஜமான சங்கல்பம், புண்யா வாசனம், வாஸ்து சாந்தி, யாக சாலை ஹோமம் நடைபெற்றது. 
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விஸ்வரூபம், கோ பூஜை, யாக சாலை மற்றும் விசேஷ ஹோமம், மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.  9 மணி முதல் 9.45 மணி வரை ஸ்ரீ ராமர் பரிவார பாலாலய ஸ்தாபனம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், கோயில் அறங்காவலர் எம்.சேஷாசலம் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com