வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் பள்ளிகொண்ட ராமராகவும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டநாதராகவும் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலில் 2-ஆம் ஆண்டு பிம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
இரவு 7 மணியவில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவில், வருகிற 20-ஆம் தேதி காலை 8 மணியளவில் திருத்தேர் புறப்பாடும், 22-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவ பாஸ்கர ஸ்வாமிகள் மற்றும் வெங்கடாம்பேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.