இந்திய கம்யூ. கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் எம்.சேகர் தலைமையில் இயங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்ட,ம் நிர்வாகி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில்


கடலூர் மாவட்டத்தில் எம்.சேகர் தலைமையில் இயங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்ட,ம் நிர்வாகி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கடலூரில்  சனிக்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம்.சேகர், நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், என்எல்சி நிர்வாகம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஏஐடியூசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 9-ஆம் தேதி அளித்த வேலை நிறுத்த அறிவிப்பின்படி கோரிக்கைகள் நிறைவேற அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் இணைந்து போராட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு தடை விதித்தும் சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, புவனகிரியில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணியை நிறுத்தக் கோரி ஹைட்ரோகார்பன் -  சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 30-ஆம் தேதி புவனகிரியில் மறியலில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com