அனுமதியின்றி மது விற்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி சனிக்கிழமை கொரக்கவாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மனைவி ஜோதி (50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் வைத்து அரசு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்குசென்ற போலீஸார், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஜோதியை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.