விளம்பரப் பதாகைகள் அகற்றம்

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. 


பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. 
சென்னையில் மொபெட்டில் சென்ற இளம் பெண் மீது விளம்பரப் பதாகை விழுந்ததையடுத்து அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்தப் பெண் உயிரிழந்தார். 
இந்தச் சம்பவத்தையடுத்து, பண்ருட்டி நகரப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி ஆணையர் எஸ்.செல்வபாலாஜி, நகரமைப்பு ஆய்வாளர் கே.செல்வம், சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி ஆகியோரது முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். 
வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்ற இந்தப் பணியின்போது 150-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. இதேபோல, குறிஞ்சிப்பாடி, வடலூர் பேரூராட்சி பகுதிகளிலும் பேனர்கள் 
அகற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com