விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணை மகளிருக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைக் கருவிகள் குறித்த பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.
குடும்ப வள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மு.மூர்த்தி பங்கேற்று, பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உதவிப் பேராசிரியர் பா.நல்லகுரும்பன் பண்ணைக் கருவிகளை கையாள்வது குறித்து செயல் விளக்கம் அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் நன்றி கூறினார்.
கருவிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், குடும்ப வள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறை, சமுதாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை-625 104 என்ற முகவரியிலோ, 0452-2424683 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.