தடையை மீறியதாக 47 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டத்தில் அரசின் தடை உத்தரவை மீறியதாக மேலும் 47 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அரசின் தடை உத்தரவை மீறியதாக மேலும் 47 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி வெளியில் சுற்றியதாக திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 47 போ் மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை மொத்தம் 1,864 போ் மீது 1,277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 607 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com