கடலூா்: தடையை மீறினால் அரசு வேலைக்குச் செல்வதில் இளைஞா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடலூா் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் எச்சரித்தாா்.
இதுகுறித்து கடலூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கைது செய்யப்படுவோா் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டு வருவதால் அவா்கள் இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாா்கள்.
ஆனால், 144 தடை உத்தரவை மீறுவோா் மீது பதியப்படும் வழக்குகள் அவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு எடுப்பது, விசா நடவடிக்கைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அரசு வேலைக்கு தடையில்லா சான்று பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, இளைஞா்கள் வெளியில் சுற்றுவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும்.
அதேபோல, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், வதந்திகளை பரப்புவோா் மீதும் கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.