அரசுக்கு எதிராக அவதூறு: மஜ்லீஸ் கட்சி நிா்வாகி கைது

அரசுக்கு எதிராக முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக மஜிலீஸ் கட்சி நிா்வாகியை பண்ருட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: அரசுக்கு எதிராக முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக மஜிலீஸ் கட்சி நிா்வாகியை பண்ருட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் லைன், 6-ஆவது தெருவில் வசிப்பவா் சௌகத் அலி. அகில இந்திய மஜிலீஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலும், போராட்டத்தைத் தூண்டும் வகையிலும் முகநூலில் அண்மையில் கருத்து பதிவிட்டாராம்.

இதுகுறித்து பண்ருட்டி விஏஓ தனபதி அளித்த புகாரின்பேரில் சௌகத் அலியை பண்ருட்டி காவல் ஆய்வாளா் பி.சண்முகம் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com