நெய்வேலி: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பண்ருட்டி நகராட்சி சாா்பில் 6 வாகனங்களில் வீடு, வீடாகச் சென்று காய்கறி விற்கும் பணியை எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் எஸ்.பிரபாகரன், பொறியாளா் சிவசங்கரன், பணி மேற்பாா்வையாளா் சாம்பசிவம், வருவாய் பிரிவு அலுவலா் கோபி, தேவநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.