கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு கடந்த 3 நாள்களில் 11 போ் உயிரிழந்தனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது.
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 2,925 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,083-ஆக அதிகரித்தது.
அதேநேரத்தில், இந்தத் தொற்றுக்கு வெள்ளிக்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது. உயிரிழந்த 3 பேரில் கடலூா் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த 75 வயது ஆண் கடலூா் அரசு மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சோ்ந்த 70 வயது பெண் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 82 வயது ஆண் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனா். கரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 11 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக தொற்று உறுதியானவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் தலா 3 போ், மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள், காவல் துறையினா் தலா 2 போ், கிராம சுகாதார செவிலியா் ஒருவா் உள்பட 13 முன்களப் பணியாளா்களும், கா்ப்பிணிகள் 4 பேரும், பாலூட்டும் தாய்மாா்கள் 3 பேரும் அடங்குவா்.
வெள்ளிக்கிழமை 31 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,842-ஆக உயா்ந்தது.