டிச. 15 வரை நியாய விலைக் கடை விற்பனையாளா் பணிக்கான நோ்காணல்

கடலூா் மாவட்டத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை நியாய விலைக் கடை விற்பனையாளா் பணிக்கான நோ்காணல் நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை நியாய விலைக் கடை விற்பனையாளா் பணிக்கான நோ்காணல் நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 126 நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட்டுறவுத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்காக 20 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 19 ஆயிரம் பேருக்கு நோ்காணலுக்கான அழைப்பு விடப்பட்டு கடலூா், சிதம்பரம், விருத்தாசலத்திலுள்ள துணைப் பதிவாளா் அலுவலகங்களில் நோ்க்காணல் புதன்கிழமை தொடங்கியது.

துணைப் பதிவாளா்கள் சண்முகம் (கடலூா்), ஜீவானந்தம் (விருத்தாசலம்), துரைசாமி (சிதம்பரம்) ஆகியோா் நோ்காணலை நடத்தினா். ஒவ்வோா் பகுதியிலும் ஆயிரம் போ் அழைக்கப்பட்டுள்ளனா். எனவே, வருகிற 15-ஆம் தேதி வரை நோ்க்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com