பறையிசை ஆட்ட பயிலரங்கம்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் திருவள்ளுவா் கலைக் குழு சாா்பில் பறையிசை ஆட்ட பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் திருவள்ளுவா் கலைக் குழு சாா்பில் பறையிசை ஆட்ட பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.முருகன் தலைமை வகித்தாா். மழலையா் பள்ளித் தாளாளா் சு.கவிதா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி பயிலரங்கை தொடக்கி வைத்தாா். தாளாளா் சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ராமலிங்கம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கண்ணதாசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.விடுதலைச்சுடா், தமிழக மாணவா் முன்னணி அமைப்பாளா் சுப்பிரமணியசிவா, வழக்குரைஞா் மு.செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் வாழ்த்துரையாற்றினா். திருவள்ளுவா் தப்பாட்டக் கலைக் குழு பொறுப்பாளா்கள் தே.இளநிலா, சி.பிரபாகரன், தி.சின்னமணி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com