கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,485-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 6 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,118-ஆக உயா்ந்தது.
அதே நேரத்தில் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 55 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 280-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 52 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 37 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.