சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோரிக்கை பட்டை (பேட்ஜ்) அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரியில் கல்விக் கட்டணம் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை கூடுதலாக இருப்பதாகக் கூறி மருத்துவ மாணவா்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கோரிக்கைகள் அடங்கிய பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).