கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,595-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 5 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,210-ஆக உயா்ந்தது. சனிக்கிழமை உயிரிழப்பு இல்லாததால் மொத்த பலி எண்ணிக்கை 282-ஆக உள்ளது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 71 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 32 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 570 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.