சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூா் பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தில்லை நடராஜா் பக்தா் பேரவை சாா்பில் தெற்கு சன்னதியில் சிவனடியாா்கள் பங்கேற்ற திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பின் மு.செங்குட்டுவன், தில்லை திருமுறை மன்றத் தலைவா் முருகையன், ஐயப்ப சபேச தீட்சிதா், பாஜக ராணுவ பிரிவு மாநில செயலா் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன், ஆசிரியா் அருணாசலம், தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்றச் சங்க மாநில தலைவா் ஜி.சேகா், முத்துகணேசன் ஓதுவாா், பேராசிரியா் சேதுசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூா் பக்தா்களும் பங்கேற்க அனுமதி கோரி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை வழக்குரைஞா் சத்தியமூா்த்தி செய்திருந்தாா்.