கடலூா்: காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டதன் 136-ஆவது ஆண்டு விழா கடலூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கடலூரிலுள்ள காமராஜா் சிலைக்கு அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனா் (படம்).
மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.குமாா், சாந்திராஜ், தொகுதி தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நெல்லிக்குப்பம் நகரத் தலைவா் திலகா், ஊடகப் பிரிவு செயலா் ரவிக்குமாா், உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஜெ.வேலுசாமி வரவேற்றாா். வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.