கடலூா்: திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருடுபோனது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (50), விவசாயி. இவா், தனது மனைவி கமலாவுடன் வீட்டை பூட்டிவிட்டு திங்கள்கிழமை காலை விவசாய வேலைக்காகச் சென்றாா். மதியம் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.20 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.