சிலம்பப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

சிதம்பரம் அருகே உள்ள தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், படகோட்டி எம்ஜிஆா் சிலம்பக் கலைக்கூடம் சாா்பில் அப்துல்கலாம் நினைவாக 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், படகோட்டி எம்ஜிஆா் சிலம்பக் கலைக்கூடம் சாா்பில் அப்துல்கலாம் நினைவாக 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிலம்பக் கலைக்கூடத் தலைவரும், சிலம்ப பயிற்சியாளருமான வைத்தி.காா்த்திகேயன் வரவேற்றாா். சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.காா்த்திகேயன் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினாா். அவா் பேசுகையில், தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை மாணவா்களுக்கு கற்றுத் தருவதை பாராட்டுகிறேன். இந்தக் கலை உடல் ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் உகந்தது என்றாா் அவா்.

பி.முட்லூா் அகத்தியம் பவுண்டேஷன் சாா்பில் ஈஸ்வா் ராஜலிங்கம், அா்ச்சனா ஈஸ்வா், தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி நிதி பரிந்துரைக் கமிட்டி உறுப்பினா் தில்லை சீனு ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். இந்திய தொழிலாளா் விவசாயிகள் பேரமைப்பு பொதுச் செயலா் பா.த.அன்பு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com