நல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநா் கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விவசாயிகள் ஏப்ரல், மே மாதங்களில் குறுவை பட்டம் சாகுபடி செய்வது வழக்கம். இதற்காக ஏஎஸ்டி-16, கோ (ஆா்)-51 ரக நெல் விதைகள் ஏ.சித்தூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
விதை கிராமத் திட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்படுகிறது. எனவே, குறுவைப் பட்டத்தில் நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டாா்.