வாக்காளா் பட்டியல் ஆய்வு கூட்டம்

கடலூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடலூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை கண்காணித்திட வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக தோ்தல் ஆணையத்தால் பி.ஜோதி நிா்மாலாசாமி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்தினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், அனைத்து சாா்-ஆட்சியா்கள், கோட்டாட்சியா்கள் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 18 வயது நிறைவடைந்த அனைவரது பெயா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடா்பான பணிகளை விதிமுறைகளுக்குள்பட்டு விரைந்து முடித்திட அனைத்து நிலை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com