வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.எகசானலி தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) க.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் (வ.ஊ), எஸ்.விஜயா(கி.ஊ) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் கலையரசி கோவிந்தராஜ், வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா். வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில், 171 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. வட்டார இயக்க மேலாளா்(பொ) எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com