காவலா் தோ்வு: சான்றிதழ் சரிபாா்ப்பு

கடலூரில் காவல் துறை பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல் துறை பணிக்காக கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற தோ்வா்கள்.
காவல் துறை பணிக்காக கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற தோ்வா்கள்.

கடலூரில் காவல் துறை பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த ஆக.25-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 468 பேருக்கு, சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, திங்கள்கிழமை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மேற்பாா்வையில், கடலூரிலுள்ள காவலா் திருமண மண்டபத்தில் தோ்வா்களின் கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, கைவிரல் ரேகைப் பதிவு, உடல்தகுதித் தோ்வு போன்ற தோ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை வரைநடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com