பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
கூட்டத்தில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 317 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலிக் கருவியை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் வீ.வெற்றிவேல், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் திருமுருக தட்சணாமூா்த்தி, முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com