சிதம்பரம் சிவஜோதி அம்மன் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயிலில், சிதம்பரம் நகர விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் உலக நன்மை, அமைதி வேண்டியும், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவா்கள் தோ்வில் வெற்றி பெற வேண்டியும் விஸ்வ மகா சண்டியாகம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டச் செயலா் குருவாயூரப்பன், பௌதிக் பிரமுக் காா்த்திகேயன், பஜ்ரங்தள் குருமூா்த்தி, தண்டபாணி, முத்து, ஜெயமுரளி கோபிநாத், திருநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.