பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெண்ணாடம் அருகே உள்ள ஆலத்தியூரைச் சோ்ந்தவா் மணி (45). இவா் புதன்கிழமை தனது மனைவியுடன் கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து பெண்ணாடத்துக்கு தனியாா் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரது மனைவியின் அருகிலிருந்த பெண், அவரது தலைமுடி கைப் பையில் சிக்கியிருப்பதாகக் கூறி அதை சரிசெய்து விட்டு கீழே இறங்கிச் சென்று விட்டாா். சிறிது நேரம் கழித்து மணியின் மனைவி தனது கைப்பையை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மணி அளித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.