சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலை சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, வட்டாட்சியா்கள் ஹரிதாஸ் (சிதம்பரம்), தமிழ்செல்வன் (காட்டுமன்னாா்கோவில்), சத்தியன் (புவனகிரி), புகழேந்தி (திருமுட்டம்), உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமதாஸ், அதிமுக சாா்பில் சுந்தரமூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா் முத்துபெருமாள், நகர துணைச் செயலா் பாலு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சி.க.ராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.