சாராயக் கடத்தலில் ஈடுபட்டவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான போலீஸாா் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கொரக்கவாடி பள்ளி அருகே வடகரை பூண்டி தாா் சாலையில் கடந்த ஜன. 29-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த கொரக்கவாடி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஜெயபால் (43) என்பவரை மடக்கிப் பிடித்தனா். அவரை சோதனை செய்ததில் 110 லிட்டா் சாராயம் இருந்தது தெரியவந்தது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், ஜெயபாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்
இவா் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு, ராமநத்தம் சிறுபாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்பு காவலில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தாா். அதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட ஆணைப்படி ஜெயபால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா்.