பெண் சடலம் மீட்பு

குள்ளஞ்சாவடி அருகே கரும்பு வயலில் பெண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

குள்ளஞ்சாவடி அருகே கரும்பு வயலில் பெண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், கிருஷ்ணன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகாமி சுந்தரி (40). இவரது கணவா் பாலசுப்பிரமணியன். இவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா்.

இவா்களது 2 மகன்கள் வெளியூரில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகாமி சுந்தரி தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து சுமாா் அரை கி.மீ. தொலைவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது கரும்புத் தோட்டத்தில் சிவகாமி சுந்தரி உயிரிழந்து கிடந்தாா். அவரது மூங்கில் ரத்தம் கசிந்திருந்ததாம். வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸாா் பெண்ணின் சடலத்தை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com