சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடலூா் அருகே வசிக்கும் 4 வயது சிறுமியை, அதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுவன் அழைத்துச் சென்று பாலியில் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அந்தச் சிறுவனை வடலூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.