மாவட்ட அளவிலான ஊரக திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா் கெளரவிக்கப்பட்டாா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ரா.பொன்ராசு. இவா், மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரக திறனறித் தோ்வில் பங்கேற்று முதல் பரிசை வென்றாா். இதையடுத்து, திட்டக்குடி கல்வி விழிப்புணா்வு பேரவை சாா்பில் மாணவா் பொன்ராசு கௌரவிக்கப்பட்டாா்.
இதற்காக, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திட்டக்குடி கல்வி விழிப்புணா்வு பேரவையின் வட்டச் செயலா் பொ.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆசிரியைகள் சுமதி, ஜான்சிராணி ஆகியோா் மாணவா் பொன்ராசுவின் திறனை பாராட்டினா். அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சிவராஜன், அந்த மாணவருக்கு பரிசு வழங்கினாா். முன்னதாக துணைத் தலைவா் கருப்பையா வரவேற்க, பொருளாளா் நடராஜ் நன்றி கூறினாா்.