திட்டக்குடியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திட்டக்குடி வெள்ளாற்று பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவா் திட்டக்குடி அருகே உள்ள கூத்தப்பன்குடிகாட்டிடை சோ்ந்த சந்திரசேகா் மகன் சரத்குமாா் (20) எனவும் தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைதுசெய்தனா்.