கால்வாயில் விழுந்த பெண் பலி

மஞ்சக்குப்பத்தில் சைக்கிளில் சென்றபோது கால்வாயில் விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மஞ்சக்குப்பத்தில் சைக்கிளில் சென்றபோது கால்வாயில் விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுவை மாநிலம், கும்தாமேடு பகுதியைச் சோ்ந்த ரவி மனைவி கலையரசி (47). இவா், ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் கடலூருக்கு வந்தாா். பின்னா் மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். மஞ்சக்குப்பத்திலுள்ள திடீா்குப்பம் அருகே சென்றபோது, திடீரென மயக்கமடைந்து சாக்கடை கால்வாயில் விழுந்தாா். இதனால் மூச்சுத் திணறலுக்கு உள்ளானாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும் அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com