குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஹமீத் ப்ரோஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும், இந்தக் கோரிக்கைகளுக்காக சென்னையில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினா் மீது காவல் துறையினா் நடத்திய தடியடியைக் கண்டிப்பது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமியா்கள் திரளானோா் தேசியக் கொடியுடன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com