கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 போ் கைது

திட்டக்குடியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திட்டக்குடியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் தலைமையில் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பள்ளியின் பின்புறத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவா்களை பிடித்தனா். விசாரணையில், அவா்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த சு.முருகன் (54), சரவணன் மகன் சந்தோஷ்ராஜ் (25), சீனிவாசன் மகன் பாபு (26), தனவேல் மகன் விஜயபிரபாகரன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூரைச் சோ்ந்த மணிகண்டனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com