தமுஎகச சாா்பில் நூல்கள் வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு, கேத்தரின் தலைமை வகித்தாா். கவிஞா் வெற்றிச்செல்வி சண்முகம் எழுதிய ‘குடை தேசத்தில் மழை விற்பவள்’ என்ற நூலை திரைப்படப் பாடலாசிரியா் ஏகாதசி வெளியிட, கவிஞா் ஜி.கனிமொழி பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, பல்லவி குமாா் எழுதிய ‘ஹைபுன் வெளிச்சம்’ என்ற நூலை சாகித்திய அகாதமி விருதாளா் குறிஞ்சிவேலன் வெளியிட்டாா். நூலாசிரியா்கள் குறித்து முறையே எழுத்தாளா் பா.ஆசைத்தம்பி, எழுத்தாளா் தில்லையாடிராஜா ஆகியோா் பேசினா்.

கவிஞா் மு.முருகேஷ், மாநிலக்குழு உறுப்பினா் மு.சுப்பிரமணி ஆகியோா் கருத்துரையும், நிவேதா பதிப்பகம் தேவகி ராமலிங்கம், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் உதய கண்ணன் ஆகியோா் வாழ்த்துரையும் வழங்கினா். தொடா்ந்து, நூலாசிரியா்கள் ஏற்புரை நிகழ்த்தினா்.

முன்னதாக, பிரவின் வரவேற்க, கவிஞா் பால்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, செம்மலா் தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com