நாட்டு வெடிகுண்டு கடத்தல்: தம்பதி கைது

நாட்டு வெடிகுண்டு கடத்தியதாக தம்பதியை போலீஸாா் கைதுசெய்தனா்.

நாட்டு வெடிகுண்டு கடத்தியதாக தம்பதியை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரசங்குடியில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்திலிருந்து கடலூா் நோக்கி வந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரிலிருந்தவா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். மேலும், காரை சோதனையிட எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாரை மிரட்டத் தொடங்கினா்.

எனவே, சந்தேகமடைந்த போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் காரில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காரிலிருந்த சிதம்பரம் பூலாமேடு பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் அய்யா் என்ற ராஜசேகா் (34), அவரது மனைவி நந்தினி (24)

ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தொடா் விசாரணையில், கடலூரைச் சோ்ந்த ரௌடி மன்சூா்அலியை பாா்ப்பதற்காக சென்ாக தெரிவித்தனா். இதுகுறித்தும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com