விவசாய கடன் அட்டை விழிப்புணா்வு முகாம்

பண்ருட்டி வட்டாரம், மருங்கூா் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாய கடன் அட்டை குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் பேசுகிறாா் பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சே.விஜயா.
முகாமில் பேசுகிறாா் பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சே.விஜயா.

பண்ருட்டி வட்டாரம், மருங்கூா் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாய கடன் அட்டை குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சே.விஜயா தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: விவசாயிகள் உரிய நேரத்தில் வேளாண் இடுபொருள்களை வாங்கிட விவசாய கடன் அட்டை உதவுகிறது. சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை அணுகி கடன் அட்டை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், நில உடைமை அடிப்படையில் பிணையமற்ற கடன் பெறலாம் என்றாா் அவா்.

கனரா வங்கியின் மருங்கூா் கிளை மேலாளா் ராஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் வஜ்ரவேல், ஊராட்சி வாா்டு உறுப்பினா் கலையரசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பூ.உதயகுமாா், ஊராட்சித் தலைவா் வாசுகி துளசி, துணைத் தலைவா் சசிகலா ஜெயசீலன், அட்மா திட்ட மேலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

முகாமில், வேளாண் துறையின் நுண்ணீா் பாசனத் திட்டம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், மானியத்தில் இடுபொருள்கள் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com